Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களின் சிறுகதை-நாவல்


நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை,நாவல், புதுக்கவிதை என்பவற்றின் மீதும் இவர் கவனம் செலுத்தியுள்ளார். இவருடைய மீண்டும் ஒரு குரு சேத்திரம்,  ”யாழ்தேவி,  ”மண்ணின் மைந்தர்கள்,  ”துருவ நட்சத்திரம்,மனித தெய்வங்கள்,  ”இந்தப் பிள்ளைக்கு ,கொக்குக் குஞ்சுகள்,வத்துக்குளம் ஆகிய சிறுகதைகள் தேசிய, சர்வதேச மட்டங்களில் பரிசு பெற்றன.
மேலும், வெய்யில் மட்டுமா சுடும்”,  ”தீக்குளிப்பு,   ”வேலிகளும் போலிகளும்,  ”உறவு தரும் உயிர்ப்பு,   ”இருள் விலகுகிறது,   ”நாளைக்கும் பூ மலரும்,   ”விழா ஒன்று நடைபெறுகிறது,  ”வழக்குத் தவணை,  ”குண்டுமணிச் சாமியார்,   ”கொண்டல் பிசின்,   ”பேயாய்க் கணங்களாய் போன்ற பல சிறுகதைகள் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்தன,.
இவர் 1977 ல் எழுதிய அலைக்குமிழ் சமூக நாவல் 2010ல் வீரகேசரி ஞாயிறு வாரமலரில் தொடராக வெளிவந்தது.   

No comments:

Post a Comment