Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்கள் பெற்ற சர்வதேசரீதியான பரிசுகள்


1)       1996ல் அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் சிந்தனை செய் தமிழா என்ற கவிதை  2ம் பரிசு பெற்றது.
2)       2002ல் அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் “உலகே உனக்குக் கண்ணில்லையா என்ற கவிதை 2ம் பரிசு பெற்றது.
3)       1998ல் பிரான்ஸ் தமிழ் ஒலி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த வானொலி நாடகப் போட்டியில் சிலம்பு பிறந்தது“  என்ற நாடகம் 2ம் பரிசு பெற்றது.
4)       2006ல்  ஞானம் சஞ்சிகை நடாத்திய கலாபூஷணம் டாக்டர் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில்  மண்ணின் மைந்தர்கள் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றது.
5)       2009ல் ஞானம் சஞ்சிகை நடாத்திய அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில்  இந்தப்பிள்ளைக்கு என்ற சிறுகதை 3ம் பரிசு பெற்றது.
6)       2009ல் ஞானம் சஞ்சிகை நடாத்திய கலாபூஷணம் டாக்டர் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் கொக்குக் குஞ்சுகள் என்ற சிறுகதை 3ம் பரிசு பெற்றது.
7)       2009ல் புலவர் மணி அல்ஹாஜ் ஆ.மூ.ஷரிபுத்தீன் நூற்றாண்டு விழா சர்வதேச மரபுக் கவிதைப் போட்டியில் மாநிலத்தில் அமைதி ஒளி ஏற்றி வைப்பீர் என்ற கவிதை 3ம் பரிசு பெற்றது.
8)       2010ல்  ஞானம் சஞ்சிகை நடாத்திய அமரர் செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில்  வத்துக் குளம் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றது.

No comments:

Post a Comment