1984ல் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹோல்புரூக் தமிழ் திரு.சு.முரளிதரன் அவர்களும்
ஆசிரியராக இருந்தார். பின்னால் அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில்
படித்துப் பட்டம் பெற்று, சிறிபாத கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இருந்து,
இப்போது G.T.Z நிறுவனத்தில் தேசியப் பணிப்பாளராக இருக்கிறார்.
அவர் இப்போது பிரபல
எழுத்தாளரும், கவிஞரும், கல்விமானுமாக விளங்குகிறார்.அவரும் நானும் சேர்ந்து
றோனியோ முறையில், அட்டையை மட்டும் அச்சிட்டு “சமவெளி மலைகள்” என்ற கவிதைத்
தொகுப்பை வெளியிட்டோம்.
“இலக்கியத் தேறல்” என்ற எனது
இலக்கியக் கட்டுரைத் தொகுப்பை 1988 இலும், “நளவெண்பா” என்ற உரை நடை நூலை 1989 இலும் வெளியிட்டேன். தொடர்ந்தும் பல துறை
சார்ந்த பல நூல்களை வெளியீடு செய்துள்ளேன்.
No comments:
Post a Comment