Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களது ஆக்கங்கள் சஞ்சிகைகளில் வெளிவந்தவை


1)       “ எடுப்பதோ பிச்சை எனும் கவிதை வவுனியாவின் முதல்ப் புதுக்கவிதைத் தொகுப்பான சுவடுகளில் வெளிவந்தது.(1975)
2)       “ பெண் அடிமை தீருதற்கு எனும் கவிதை சதாவதானி கதிரைவேற்பிள்ளை சன சமூக நிலைய வெளியீடான கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976 தை)
3)       “ இராமாயணத்தில் சற்று நேரம் எனும் கட்டுரை கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976மாசி) 
4)       “ காதல் எனும் கவிதை கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976வைகாசி )
5)       “ கல்லும் கயலும் எனும் சிறுகதை கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976மார்கழி)
6)       “ இலக்கியத் தேறல் எனும் கட்டுரை யாழ்.பல்கலைக் கழக மலரான  செந்தழல் எனும் மலரில் வெளிவந்தது.(1976/77)
7)       “ காத்திருந்தேன் வந்தாள் எனும் கவிதை யாழ்.பல்கலைக்கழகத் தமிழ் மன்றத்தின்  கவிதைத்தொகுப்பான தேன்துளிகள் தொகுப்பில் வெளிவந்தது.(1977)
8)       “ இருள் விலகுகிறது எனும் சிறுகதை யாழ் வளாகத் தமிழ் மன்றத்தின்  செந்தழல் எனும் ஆண்டு  மலரில் வெளிவந்தது.(1977/78)
9)       “ மீண்டும் கோழையாய் எனும் சிறுகதை யாழ்.பல்கலைக்கழக மாலை எனும் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது.(1978)

10)    “ தமிழ் வீரம் எனும் கவிதை யாழ் வளாகத் தமிழ் மன்றத்தின் செந்தழல் எனும் ஆண்டு மலரில் வெளிவந்தது.(1977/78)
11)    “ நல்லை நகர் உறைகின்ற எனும் இசைப் பாடல் யாழ் பல்கலைக்கழக இந்து நெறி மலரில் வெளிவந்தது.(1977/78)
12)    “ பிணைக்குப் பிணை எனும் கட்டுரை யாழ் .பல்கலைக்கழக இன்கிலாப் மலரில் வெளிவந்தது.(1977/78)
13)    மகாகவி பாரதியின் நிறைவேறாத ஆசைகளும், நிறைவேறிய ஆசைகளும் எனும் இக் கட்டுரை புது ஊற்று எனும் மலரில் வெளிவந்தது.(1977தை ,புரட்டாதி)
14)    “ இராமனின் மூதாதையர்கள் தமிழர்களா எனும் இக் கட்டுரை நீர்வேலி கந்தசாமி கோவில் கும்பாபிஷேக மலரில் வெளிவந்தது.(1978)
15)    “ பாரதத்தில் பதினோராம் வீடு எனும் இக் கட்டுரை சோதிட மலரில் வெளிவந்தது.(1979மாசி ,பங்குனி )
16)    “ சுந்தரர் – சனி, கேது – ஈஸ்வரம் எனும் இக் கட்டுரை சோதிட மலரில் வெளிவந்தது.(1979புரட்டாதி)
17)    “ ஓமெனும் மந்திரத்தில் பாடி எனும் இசைப் பாடல் சோதிட மலரில் வெளிவந்தது.(1979ஆவணி)  
18)    “ புத்திரபாக்கியம் எனும் இக் கட்டுரை சோதிட மலரில் இரு தொடராக வெளிவந்தது.(1979ஆனி ,ஆடி) 
19)    “ சந்திரனுக்கு ரோகினி மேல் காதல் எனும் இக் கட்டுரை சோதிட மலரில் வெளிவந்தது.(1979ஆவணி)
20)    குருவாய் எழுந்து எனும் இக் கவிதை சோதிட மலரில் வெளிவந்தது.(1979புரட்டாதி) 
21)    “ பாரதத்தில் மகத்துச்சனி எனும் இக் கட்டுரை சோதிட மலரில் வெளிவந்தது.(1979கார்த்திகை)
22)    “ கருணாநிதியும் சோதிட நம்பிக்கையும் எனும் இக் கட்டுரை சோதிட மலரில் வெளிவந்தது.(1979மார்கழி) 
23)    “ புவி இயல் இதுதான் ஐயா எனும் அஞ்சலிக் கவிதை பேராசிரியர்
24)    சோ. செல்வநாயகம் அவர்களின் நினைவாஞ்சலி நூலில்  வெளிவந்தது.(1979)
25)    “ வேலிகளும் போலிகளும் எனும் சிறுகதை ஈழத்துச் சிறுகதை மஞ்சரியில் வெளிவந்தது.(1980)
26)    “ குன்றுதோறாடி வரும் குமரன் எனும் இசைப் பாடல் சோதிட மலரில் வெளிவந்தது.(1980சித்திரை)
27)    “ வினைகள் அகல வரந்தர வேண்டும் எனும் இசைப் பாடல் சோதிட மலரில் வெளிவந்தது.(1980ஆனி) 
28)    “ நீதிகள் சொல்லிடில் சாதி ரெண்டு எனும் கவிதையும் “ வீரத்தாலாட்டு “எனும் பாடலும் சுடர் சஞ்சிகையில் வெளிவந்தது.(1980ஆடி) 
29)    “ஆறுமுகம் கண்ட போதில் எனும் இசைப் பாடல் சோதிட மலரில் வெளிவந்தது.(1980ஆவணி )
30)    “கருணைக் கடலே கந்தா எனும் இசைப் பாடல் சோதிட மலரில் வெளிவந்தது.(1980புரட்டாதி) 
31)    “ சீதனக் கடிவாளத்தை எனும் கவிதை பூபாளம் கவிதை ஏட்டில் வெளிவந்தது.(1980)
32)    “ வெள்ளி விரதம் எனும் கட்டுரை சோதிட மலரில் வெளிவந்தது.(1980ஐப்பசி “அலை கடல் மணற் பரப்பு எனும் கவிதை சுடர் சஞ்சிகையில் வெளிவந்தது.(1981)
33)    “ தரணி புகழ் வன்னி எழில்க் கந்தா எனும் கவிதை வவுனியா கந்தசுவாமி கோவில் மகாகும்பாபிஷேக மலரில் வெளிவந்தது.(1982)
34)    “ செல்லாத காசு நாங்கள் எனும் கவிதை உலகத் தமிழ்க்கவிதைத் தொகுப்பான செம்மாங்கனியில் வெளிவந்தது.(1982)
35)    “ ஊடலால் எரிந்தது கூடல் மாநகர் “  எனும் இவரது கட்டுரை கிருதயுகம் எனும் சஞ்சிகையில் வெளிவந்தது. (1992)  
36)    “ வன்னி மன்னனே இறுதி மன்னன் எனும் கவிதையும் “ நெற்றியில் நிலைத்த நீறும் “ , தோற்றலும் வெற்றிப் பாதை “, கல்லெனத் திரண்ட தோளும் “ஆகிய பாடல்களும்  பண்டாரவன்னியன் விழா மலரில் வெளிவந்தன.(1982)
37)    “ வேலை தேடி எனும் சிறுகதை சுடர் சஞ்சிகையில் வெளிவந்தது.(1983)
38)    “ புதுமழையும் உழவனும் எனும் கவிதை பலாலி ஆசிரியர் கல்லூரி தமிழ் மன்ற  மலரான கலாவதியில் வெளிவந்தது.(1988/89)
39)    “ குண்டுமணிச் சாமியார் எனும் சிறுகதை ஆலயமணி சஞ்சிகையில் வெளிவந்தது.(1989)
40)    “ கம்பனும் ஜனநாயகமும் எனும் கட்டுரை வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய நூற்றாண்டு விழா மலரில் வெளிவந்தது.(1990)
41)    “ புண்ணும் கண்ணாடியும் எனும் கட்டுரை வாழ்க்கை சஞ்சிகையில் வெளிவந்தது(1992.ஐப்பசி-கார்த்திகை.)
42)    “ கங்கையில் விடுத்த ஓலையின் ஊற்றுக் கண்கள் எனும் கட்டுரை சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு  விழாமலரான உள்ளக்கமலத்தில் வெளிவந்தது.(1992)
43)    “ பெண்களில் பெண் சாரதிகள் எனும் கட்டுரை வாழ்க்கை சஞ்சிகையில் வெளிவந்து.(10.09.1993)
44)    “ கற்றலும் நிற்றலும் எனும் கட்டுரை சுவைத்தேன் (வடக்கு கிழக்கு மாகாண தமிழ் .மொழித்தின விழா மலர்) மலரில் வெளிவந்து.(07.07.1994)
45)    “ குறளும் சிலம்பும் எனும் கட்டுரை கலைமருதம் (வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர்) மலரில் வெளிவந்து.(16.09.1995)
46)    “ வாழ்த்துப்பா செல்வி.பிரதீபா ராமசாமியின் பரத நாட்டிய அரங்கேற்ற மலரில் வெளிவந்தது .(01.06.1996)
47)    “ கண்ணப்பரும் காளத்தியப்பரும் எனும் கட்டுரை சிவதத்துவ மலரில் வெளிவந்தது .(வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் மலர்.)(14.06.1996)
48)    “ வன்னிப் பிரதேச வயற்பண்பாடு எனும் கட்டுரை மருத நிலாவில் வெளிவந்தது.  (வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழா மலர்.)(04.11.1996)
49)    “ முன்னுரை பின் நவீனத்துவமும் அழகியலும்( ந.ரவீந்திரனின்) நூலில் வெளிவந்தது.(16.09.1997)
50)    “ வாழ்த்துரை வவுனியா சமயபுரம் முத்துமாரியம்மன் கும்பாபிஷேக மலரில் வெளிவந்து.(1998)
51)    “ குந்திகளாகட்டும் “ பொங்கற் பாட்டு , “ கவிச்சரம் ஆகிய கவிதைகள் கவிச்சரம் 1ல் வெளிவந்தன .(1998தை )
52)    “ வணக்கம் வாழ்த்து ஆதலினால் ஆகிய கவிதைகள் கவிச்சரம் 2ல் வெளிவந்தன .(1998சித்திரை)
53)    “ இந்து சமயமும் சக்தி வழிபாடும் எனும் கட்டுரை வவுனியா குருமன்காடு ஸ்ரீகாளியம்மன் கும்பாபிஷேக மலரில் வெளிவந்தது.(24.07.1998)
54)    “ வன்னியின் வரலாறும் வாழ்வும் எனும் கட்டுரை கொழும்புத் தமிழ்ச் சங்க வன்னிப் பிரதேச சிறப்பு மலரான கலை அருவியில் வெளிவந்தது.(1998)
55)    “ மநு –மநு நீதிகண்ட சோழன் –அநபாயன் எனும் கட்டுரை புதுஊற்று மலரில் வெளிவந்தது(1998.ஏப்ரல் –ஜூன்).
56)    “ கற்பனை இன்பம் எனும் கட்டுரை தடம் (வவுனியா வளாகம்) சஞ்சிகையில் வெளிவந்தது.(1998)
57)    “ கற்பனை அழகு எனும் கட்டுரை புதுவசந்தம் (தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெள்ளிவிழாச் சிறப்பிதழ்) மலரில் வெளிவந்தது.(1974-1999)
58)    “ வன்னி இறையே எனும் கவிதை வவுனியா ஸ்ரீகந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக மலரில் வெளிவந்தது.(1999)
59)    “ தமிழ் போலத்தழைத்தோங்கி நீடு வாழ்க எனும் வாழ்த்துப்பா ஜீவநதி (கே.பி.நடனசிகாமணியின் மணி விழா சிறப்பு மலர்) மலரில் வெளிவந்தது.(28.11.1999)
60)    “ கம்பனின் கவித்துவம், தனித்துவம், மகத்துவம் எனும் ஆய்வுக் கட்டுரை கம்பன் மலரில் வெளிவந்தது.(அகில இலங்கைக் கம்பன் கழகம் 20ம் ஆண்டு நிறைவு வெளியீடு.)(2000)
61)    சீரிய இலக்குடன் சமூக முன்னேற்றத்திற்காக படைக்கப்படுவனவே இலக்கியங்கள் எனும் நேர்காணல் வவுனியா வளாக தடம் சஞ்சிகையில் வெளிவந்தது.(2000)
62)    நயினை மைந்தர்களின்  மிருதங்க, கர்நாடக, சங்கீத அரங்கேற்ற மலரில்  இவரது   வாழ்த்துச் செய்தி இடம்பெற்றது.(2.7.2000)
63)    “ திருக்குறளே வாழி வாழி எனும் கவிதை கொழும்புத் தமிழ்ச் சங்கத்    திருக்குறள் மாநாடு சிறப்பு மலரில்   வெளிவந்தது.(2.12.2000)
64)    “ புறநாநூற்றில் அறக்கருத்துக்கள் எனும் கட்டுரை கவின் தமிழ் (வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின விழா) மலரில் வெளிவந்தது.(9.7.2001)
65)    வன்னியின் வாழ்வும் வரலாறும் எனும் கட்டுரை கொம்பறை வன்னி விழா  ஆண்டு மலரில் வெளி வந்தது.(கனடா2001)
66)    அதிபர் திரு.சி.வையாபுரிநாதன் அவர்களின் மணிவிழா சிறப்புமலரில் இவரின்  
67)    “ வாழ்த்துச்செய்தி இடம்பெற்றது.(8.7.2001)
68)    கூடில்லாக் குஞ்சுகள் எனும் நாவலில் இவரது வெளியீட்டுரை வெளிவந்தது.(2001 டிசம்பர்)
69)    “ பூபாளத்துப் பூக்கள் எனும் கவிதை நூலில் இவரது அணிந்துரை வெளிவந்தது.(9.1.2001)
70)    “ சொல்லில் எழுதிய வாழ்வு எனும் நூலில் “அவதானிப்பின் பின்னான குறிப்பு எனும் இவரது குறிப்பு இடம் பெற்றது.(2001 ஜூலை)
71)    “அடங்காத பற்றுக்கொண்ட எனும் இவரது இசைப் பாடல் வவுனியா வளாக தடம் சஞ்சிகையில் வெளிவந்தது.(2002)
72)    “ பழக இனிய பண்பாளர் எனும் கட்டுரை அழகர் தரிசனம் எனும் மலரில் வெளிவந்தது.(10.5.2002)
73)    “ தமிழ் மொழியும் அடைமொழியும் எனும் கட்டுரையும் “, வட்டத்தின் விருது பெறும் இருவர் எனும் குறிப்பும்வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட சஞ்சிகையான    மாருதம் ஒன்று  சஞ்சிகையில் வெளிவந்தது.(2002 சித்திரை)
74)    “ தமிழை வளர்ப்போம் எனும் கட்டுரை மேற்படி மாருதம் இரண்டு  சஞ்சிகையில் வெளிவந்தது.(2002 ஐப்பசி )
75)    “ மூன்றிலீர் இனம் தமிழ் பேசும் இனம் எனும் இவரது கவிதை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு சிறப்பு மலரில் வெளிவந்தது.(2002…22,23,24,oct)
76)    செல்வி.பிரேமலதா கிருஷ்ணபிள்ளையின் பரத நாட்டிய அரங்கேற்ற மலரில் இவரது “ வாழ்த்துரை இடம் பெற்றது(12.3.2003)
77)    “ வீட்டுக்கு விளக்கு வைக்கும் விந்தைக் குருவி எனும் இவரது கட்டுரை வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின மலரான கவின் தமிழ் எனும் மலரில் வெளிவந்தது(2003).
78)    “ தமிழை வளர்ப்போம் தமிழராய்த் தலை நிமிர்வோம் எனும் இவரது கட்டுரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாருதம் நான்கு சஞ்சிகையில் வெளிவந்தது.(2003 ஐப்பசி )
79)    “ பாக்கியம் சேர் தபால் சேவை வாழ்க வாழ்க எனும் இவரது கவிதை world post day 9th oct. 2003 மலரில் வெளிவந்தது.(2003)
80)    “ நாளை மலரும் நல் வாழ்வு எனும் இவரது கவிதை பூரணி இலக்கியச் சஞ்சிகை இதழ் ஒன்றில் வெளிவந்தது.(2003 தை )
81)    “ வாலி சுக்கிரீவன் முதலானோர் குரங்குகளா வானரர்களா எனும் இவரது  கட்டுரையும் “ இலக்கியச் சிமிழ் சிரித்திரன் 1983 டிசம்பர் , “ தமிழன் கணக்குப்போட்டு வாழ்பவனா சிரித்திரன் இலக்கியச் சிமிழ் 1979 ஆவணி , “ தேன் வந்து பாயுது காதினிலே “ சிரித்திரன் 1982 மே , இலக்கியச் சர்ச்சை சிரித்திரன் 1983 ஜூலை ஆகியவை மறு பிரசுரமாகவும் பூரணி இதழ் இரண்டில் வெளிவந்தன.(2003 சித்திரை)
82)    “அகளங்கனுடன் சில நிமிடங்கள் எனும் கட்டுரை கவிதேசம் சஞ்சிகையில் இடம் பெற்றது.(2003 தை –மாசி)
83)    சிந்தனை ஆற்றல் மிகு சிரித்திரன் ஆசிரியர் எனும் இவரது கட்டுரை சிந்தனைப் போராளி சிரித்திரன் சி.சிவஞானசுந்தரம் எனும் மலரில் இடம்பெற்றது.(2003)
84)    இலக்கியப் போர்களும் இறந்தோர்களும் எனும் இவரது கட்டுரை வவுனியா விபுலானந்தாக் கல்லூரியின் விபுலம் மலரில் வெளிவந்தது.( 2003)
85)    “எங்கள் தமிழ் எனும் இவரது கவிதை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாருதம் சஞ்சிகை இதழ் மூன்றில் வெளிவந்தது.(2003)
86)    காக்கைச் சிறகினிலே எனும் இவரது கட்டுரை மேற்படி மாருதம் சஞ்சிகை  இதழ்ஐந்தில் வெளிவந்தது.(2004 சித்திரை)
87)    “காக்கைச் சிறகினிலே எனும் கட்டுரை (வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின மலரான) கவின் தமிழ் மலரிலும் வெளிவந்தது.(2004)
88)    “ வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வரலாறும் வளர்ச்சியும் எனும் இவரது கட்டுரை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய கல்லூரிச் சஞ்சிகை கதிராளியில் வெளிவந்தது.(2004)
89)    அதிபர் உயர் திரு.சி.வி.பேரம்பலம் அவர்களின் மணிவிழா மலரில் இவரது ஆசிச்செய்தி இடம்பெற்றது.(2004)
90)    “ சங்க காலம் பற்றிய சர்ச்சை எனும் இவரது கட்டுரை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய கல்லூரிச் சஞ்சிகை அறிவொளி யில் வெளிவந்தது.(2004)
91)    “ உயிரினங்களிடமிருந்து மனிதன் கற்றவை எனும் கட்டுரை கொம்பறை வன்னி விழா ஆண்டு மலரில் வெளிவந்தது(2005)
92)    “ காயம் இல்லாத ஆகாயம் எனும் இவரது கட்டுரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாருதம் சஞ்சிகை இதழ் 6 ல் வெளிவந்தது(2005 சித்திரை) 
93)    “ தமிழ்க்கவிதை ஊற்று  எனும் இவரது கவிதை கவிஞர் ஜின்னாஹ் அவர்களின் பண்டார வன்னியன் காவியம் எனும் நூலின் சிறப்புப் பாயிரமாக வெளிவந்தது. .(2005)
94)    “ பயன் படாத கல்வி எனும் இவரது கட்டுரை வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின மலரான கவின் தமிழ் இல் இடம் பெற்றது.(2005)
95)    வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய கல்லூரிச் சஞ்சிகை கதிராளியில் இவரது “நுழை வாயில் எனும் பகுதியும் “ தாய்மை அது தெய்வீகம் எனும் கட்டுரையும் இடம் பெற்றது.(2005)
96)    “ நாளைக்கும் பூ மலரும் எனும் இவரது சிறுகதை மூதறிஞர் கலாநிதி க.சொக்கலிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவாக வெளிவந்த ஈழத்து எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகளின் தொகுப்பான முதுசொம் எனும் சிறுகதைத்  தொகுப்பில் வெளிவந்தது.(2005)       
97)    அபிவிருத்தி எனும் சஞ்சிகையில் அலங்காரம் பகுதியில் இவரது கேள்வி பதில் இடம் பெற்றது.( 2006 ஏப்ரல் -மே)
98)    “ மண்ணின் மைந்தர்கள் எனும் இவரது சிறுகதை பிரான்ஸ்ஸில் இருந்து வெளிவரும் எரிமலை சஞ்சிகையில் வெளிவந்தது. (2006 ஆவணி )
99)    “ ஆச்சரியப்பட வைக்கும் அக்காலப் போர் ஆயுதங்கள் எனும் இவரது கட்டுரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாருதம் சஞ்சிகை இதழ் 7 ல் வெளிவந்தது.(2006)
100) “ வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் எனும் இவரது கட்டுரை (வ /மாவட்ட கலாசார விழா மலர்) மருத தீபம் மலரில் வெளிவந்தது.(2006)
101) “ சூலத்திற்கு வேலையுண்டு காளியம்மா எனும் இவரது கவிதையும் “இந்து சமயமும் சக்தி வழிபாடும் எனும் இவரது கட்டுரையும் வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன்  இராஜ கோபுர மகா கும்பாபிஷேக சிறப்பு மலரான காளி தரிசனம் மலரில் இடம் பெற்றன.(2006)
102) “ கல்வியும் இலக்கியமும் எனும் இவரது கட்டுரை வவுனியா நகரசபை உள்ளுராட்சி வார சிறப்பு மலரில் வெளிவந்தது.(2006)
103) வன்னிப் பிரதேச திருமண நடைமுறைகள் எனும் இவரது கட்டுரை மாவீரன் பண்டார வன்னியன் 203 வது ஆண்டு வெற்றி விழா மலரில் வெளிவந்தது.(2006)
104) “ வழக்குத் தவணை எனும் இவரது சிறுகதை வவுனியா பிரதேச செயலக விழா மலரான சுகந்த நிலா மலரில் வெளிவந்தது.(2006)
105) “கல்வியும் இலக்கியமும் எனும் இவரது கட்டுரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாருதம் சஞ்சிகை சித்திரை –ஐப்பசி இதழ் எட்டில் வெளிவந்தது.(2007)
106) “ பாவைப் பாட்டு மரபில் திருவெம்பாவையும்,திருப்பாவையும் எனும் இவரது கட்டுரை வவுனியா மணிவாசகர் சபையினால் வெளியீடு செய்யப்பட்ட திருவாசகத் தேன் எனும் மலரில் வெளிவந்தது.(2007)
107) “ இன்னல் களையும் எம்பெருமான் நீயே எனும் இவரது இசைப் பாடலும், “நம்பி ஆரூரர் எனும் இவரது பா நாடகமும் கோவில் குளம் சிவன் கோவில் கும்பாபிஷேக மலரான சிவதத்துவ மலரில் வெளிவந்தது.(2008) 
108) “தமிழர் திருமணமும் சீதனமும் எனும் இவரது கட்டுரை வவுனியா பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர்தின வெளியீடான நதி எனும் மலரில் வெளிவந்தது.(2008)
109) “நானும் எனது இலக்கியப் பணியும் எனும் இவரது கட்டுரை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய சஞ்சிகையான அறிவொளி யில் வெளிவந்தது.(2008)
110) “ மனம் எனும் மதயானை எனும் இவரது கட்டுரை வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேக சிறப்பு வெளியீட்டு மலரான கருநாக பூஷணம் எனும் மலரில் வெளிவந்தது.(2008)
111) “ எமக்குக் குத்துப்பாட்டு தேவையில்லை பாடலாசிரியர் தமிழ்மணி அகளங்கன் எனும் இவரது பேட்டி இசை உலகம் சஞ்சிகையில் வெளிவந்தது.பேட்டி கண்டவர் யாழ்.தர்மினி பத்மநாதன்(01.15.2009)
112) “ பாடசாலை மாணவிகளின் சீருடை எனும் இவரது கட்டுரை தணிகை கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணி நயப்பு மலரில் வெளிவந்தது.(2009 செப்.)
113) “ ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ எனும் இவரது கட்டுரை கனகசபாபதி ரணேஸ்1973-2009, 31ம்   நாள் நினைவு மலரில் வெளிவந்தது(2009).
114) “ புலவர்களின் தீர்க்க தரிசனம் எனும் இவரது கட்டுரையும் “ வவுனியாவில் குறும்படங்கள் எனும் இவரது சிறுகுறிப்பும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாருதம் சஞ்சிகை இதழ் பத்தில் வெளிவந்தன .(2009)
115) “ வவுனியாவும் பரதநாட்டிய வளர்ச்சியும் எனும் இவரது கட்டுரை வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் 16 வது ஆண்டு விழா சிறப்பு மலரான சலங்கை ஒலி மலரில் வெளிவந்தது.(2010)
116) “ திருக்குறள் ஓர் ஆன்மீக நூலா   எனும் இவரது கட்டுரையும் “வன்னிப் பிரதேச கிராமிய திருமண நடை முறைகள் எனும் இவரது கட்டுரையும் வவுனியா வெளி வட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய கலாசார /அன்னதான மண்டபத் திறப்புவிழா மலரான சிந்தாமணியில் வெளி வந்தன.  (2010).
117) “ கவிஞர்களின் போக்கும் நோக்கும் எனும் இவரது கட்டுரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் மாருதம் சஞ்சிகை இதழ் 11 ல் (சித்திரை –ஐப்பசி)வெளிவந்தது(.2010)
118) “ திருக்குறள் ஓர் ஆன்மீக நூலா எனும் இவரது கட்டுரை  உடப்பு விஷ்ணு ஆலய கும்பாபிஷேக மலரில் வெளிவந்தது.(2010)
119) “ இன்று ஒரு புதுஉலகம் படைப்போம் எனும் இவரது கவிதை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கிய மேம்பாட்டுத் திங்கள் ஏடான “ ஓலை யில் வெளிவந்தது.(2010)     
120) “உயிரினங்களிடமிருந்து மனிதன் கற்றவை” எனும் இவரது கட்டுரை  பண்டாரி குளம் அம்மன் கோவில் கும்பாபிஷேக மலரான “முத்துமாரி அமிர்தம்” எனும் மலரில் வெளிவந்தது.(2010)
121) “தாய்மை அது தெய்வீகம்” எனும் இவரது கட்டுரை தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஷேக சிறப்பு மலரில் வெளிவந்தது.(29.08.2010)     
122) “ தமிழே தாயே என் உயிர் மூச்சே எனும் இவரது கவிதை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இலங்கை சிறப்பு மலரில் வெளிவந்தது.(2011)
123) “ ஈழத்து தமிழ் இலக்கியமும் பெண்களும் எனும் இவரது கட்டுரை சுவைத்திரள் இதழ் 35 (தை –மாசி –பங்குனி வெளிவந்தது.) (2011)
124) “ தமிழ் மொழியின் அடை மொழிகள் எனும் இவரது கட்டுரை மலேசியா கோலாலம்பூரில் இருந்து வெளிவரும் மயில் சஞ்சிகையில் வெளிவந்தது.(15.01.2011)
125) “கண்டோம், சென்றோம்,வென்றோம் வீடு திரும்பினோம் எனும் இவரது கட்டுரை  சுவைத்திரள்  சஞ்சிகையில்  இரு தொடராக வெளிவந்தது. (வைகாசி –ஆனி 2011)
126) வவுனியா வைரவர் புளியங்குளம் ஸ்ரீ ஞான வைரவர் கோவில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலரில் “ சகுனங்களும் சமகாலமும் எனும் இவரது கட்டுரை வெளிவந்தது.(2011)
127) “ திருக்குறள் ஓர் ஆன்மீக நூலா எனும் இவரது கட்டுரை கொழும்புத்தமிழ்ச் சங்க திருக்குறள் மாநாட்டுச் சிறப்பு மலரான “முப்பால் எனும் மலரில் வெளிவந்தது.(2011)
128) “ தசரதரும் மனைவியரும் எனும் இவரது கட்டுரை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய தமிழ் மன்ற தமிழ் மொழித்தின சிறப்பு மலரான “தமிழ் வாணி யில் வெளிவந்தது.(2011)         

No comments:

Post a Comment