Monday, April 16, 2012

கலாநிதி அகளங்கன்-சிறு குறிப்பு


வவுனியா பம்பைமடுவில் நாகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் மகனாக 1953.12.04.ல் பிறந்து,வளர்ந்து பம்பைமடு அ.த.க.பாடசாலை மற்றும் வ/தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப,இடைநிலைக் கல்வியை நிறைவேற்றி சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் உயர்தரக் கல்வியைப் பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்ட நெறியில் பயின்ற வேளையிலே எழுத்துலகில் தீவிரமாகப் பிரவேசித்து சிரித்திரன் இதழில் தனது மரபு இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை வரையத் தொடங்கினார்

கலாநிதி அகளங்கன் அவர்களும் நாடக இலக்கியமும்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வி கற்ற போது  (அப்போது வளாகம் 1977) முத்தமிழ் விழாவில் இவரது கதை வசனத்தில் உருவாகிய அமரேந்திரா நாடகம் மேடையேறியது.கனல் தெறிக்கும் வசனங்களால் பெயர் பெற்ற இந்நாடகம் யாழ்.அரியாலை நாடக மன்றத்தாலும் மேடையேறப்பட்டது. திருகோணமலை மூதூர் சேனையூர் நாடக மன்றத்தினராலும் மேடையேறப்பட்டது.
அனிச்சமலர் என்ற இவரது சமூக சீர்திருத்த நாடகம் வவுனியாவில் நடைபெற்ற நாடகப் போட்டி ஒன்றில் முதலிடம் பெற்றது.
 நு / ஹோல்புறுக் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்த காலத்தில்(1985) பல இலக்கிய நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றியுள்ளார். திரு.சு.முரளிதரன் ஆசிரியர் அவர்கள் இவருக்குத் துணையாக இருந்தார்.
பல வானொலி நாடகங்களை எழுதியுளார்அன்றில் பறவைகள் ,கூவாத குயில்கள், இலக்கிய நாடகங்கள், “கங்கையின் மைந்தன் “ என நான்கு நாடக நூல்களாக அவை வெளி வந்ததன.
யாழ்தேவி என்ற தொலைக்காட்சி நாடகப் பிரதி ரூபவாகினி சிரேஸ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், வவுனியா நகரசபையினால் சின்னத்திரை (தொலைக்காட்சி) நாடகமாகத் தயாரிக்கப்பட்டது(.19.94)
இது வவுனியாவில் வெளிவந்த முதல் குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.(1994)

Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்கள் மெல்லிசைப் பாடல்கள்


சேற்று வயற் காட்டினிலேஎனும் பாடல் இந்திய பிரபல திரைப் பட இசை அமைப்பாளர் திரு.T.K.ராமமூர்த்தி (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரில் ஒருவர்) அவர்களால் 1979 ல் இசை அமைக்கப்பட்டு இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் பாடப்பட்டு வந்தது  .”சலசலக்கும் ஓசையிலே” ,”காற்று வந்தால் நாணமென்ன” ,”பொன்மாலை நேரம் ,”காலைப் பனிக்குளித்து” ,”தாமரை மலர் செய்த தவமோ” ,”மல்லிகைத் தோட்டத்திலே” “,குன்றாத இளமையுடன் குமரன்முதலான இவரது மெல்லிசைப் பாடல்கள் 1984 காலப்  பகுதியில் இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்  தமிழ்ச் சேவை ஒன்றில் பாடப்பட்டு வந்தன.

கலாநிதி அகளங்கன் அவர்கள் வானொலி


       “அவர்கள் படித்தவர்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்    கூட்டுதாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(20.06.1987).
2)      “அம்மா நான் வெளிநாடு போறேன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(09.01.1990)
3)             “ஆற்றில் விழுந்த மலர்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(17.03.1990)
4)             “இயந்திர இல்லறம்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(27.10.1990).
5)             “அன்றில் பறவைகள்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(16.03.1991)
6)             “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(16.11.1991)
7)             “செஞ்சோற்றுக் கடன்”  எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் .கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(11.12.1991)
8)             “பப்புருவாகனன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(24.03.1992).
9)             “பாரி வள்ளல்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(27.10.1992).

கலாநிதி அகளங்கன் ஆக்கங்கள் சிரித்திரனில் வெளிவந்தவை


1.        “ இலக்கியச் சிமிழ்,  “ பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ,ஆகியவை  அகளங்கன் என்ற பெயரிலும் இலக்கியத்தில் நகைச்சுவை எனும் கட்டுரை நா .தர்மராஜ் எனும் பெயரிலும் சிரித்திரன் வைகாசி இதழில் வெளிவந்தன.(1979)
2.        “ இலக்கியத்தில் நகைச்சுவை எனும் கட்டுரை, பேராசிரியர் ஆறு அழகப்பனுடன் ஒரு சந்திப்பு , புவி இயல் இதுவோ எனும் அஞ்சலிக் கவிதை, “மனுநீதி கண்ட சோழன் போக்குவரத்து சேவை  “ மனோரம்மியம் எனும் நாட்டிய விமர்சனக்கட்டுரை (மேகலை எனும் பெயரில்) ஆகிய இவரது ஆக்கங்கள் சிரித்திரன் ஆனி இதழில் வெளிவந்தன.(1979) .
3.        இலக்கியத்தில் நகைச்சுவை எனும் கட்டுரை  நா.தர்மராஜா எனும் பெயரிலும் “நகையினால் விளைந்த காவியங்கள் எனும் தகவல் ,ஏன் இப்படி எனும் தகவல் “,இலக்கியச் சிமிழ் எனும் கட்டுரை ஆகியன அகளங்கன் எனும் பெயரிலும் சிரித்திரன் ஆடி இதழில் வெளி வந்தன.(1979)
4.        “இலக்கியச் சிமிழ் எனும் கட்டுரை, “திரேதா யுகத்தில் மாப்பால் எனும் செய்திக் குறிப்பு, “ மாமியை மிஞ்சிய மருமகள் ஆகியன அகளங்கன் எனும் பெயரிலும், “இலக்கியத்தில் நகைச்சுவை எனும் கட்டுரை சே .நா .தர்மராஜன் எனும் பெயரிலும் சிரித்திரன் ஆவணி  இதழில் வெளிவந்தன.(1979)

கலாநிதி அகளங்கன் அவர்களது ஆக்கங்கள் சஞ்சிகைகளில் வெளிவந்தவை


1)       “ எடுப்பதோ பிச்சை எனும் கவிதை வவுனியாவின் முதல்ப் புதுக்கவிதைத் தொகுப்பான சுவடுகளில் வெளிவந்தது.(1975)
2)       “ பெண் அடிமை தீருதற்கு எனும் கவிதை சதாவதானி கதிரைவேற்பிள்ளை சன சமூக நிலைய வெளியீடான கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976 தை)
3)       “ இராமாயணத்தில் சற்று நேரம் எனும் கட்டுரை கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976மாசி) 
4)       “ காதல் எனும் கவிதை கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976வைகாசி )
5)       “ கல்லும் கயலும் எனும் சிறுகதை கதிரொளி சஞ்சிகையில் வெளிவந்தது.(1976மார்கழி)
6)       “ இலக்கியத் தேறல் எனும் கட்டுரை யாழ்.பல்கலைக் கழக மலரான  செந்தழல் எனும் மலரில் வெளிவந்தது.(1976/77)
7)       “ காத்திருந்தேன் வந்தாள் எனும் கவிதை யாழ்.பல்கலைக்கழகத் தமிழ் மன்றத்தின்  கவிதைத்தொகுப்பான தேன்துளிகள் தொகுப்பில் வெளிவந்தது.(1977)
8)       “ இருள் விலகுகிறது எனும் சிறுகதை யாழ் வளாகத் தமிழ் மன்றத்தின்  செந்தழல் எனும் ஆண்டு  மலரில் வெளிவந்தது.(1977/78)
9)       “ மீண்டும் கோழையாய் எனும் சிறுகதை யாழ்.பல்கலைக்கழக மாலை எனும் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது.(1978)

கலாநிதி அகளங்கன் அவர்கள் பற்றி ஏனையோர்


1)       அகளங்கனின் இலக்கியச் சிமிழ் நூல் வெளியிடப்பட்ட பின்னர் வவுனியா வீரகேசரி நிருபரால்,அகளங்கனின் ஆற்றல் இறைவன் அளித்த கொடை எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் எழுதப்பட்டது.12.02.1993)
2)       செந்தமிழும் நாப்பழக்கம்  நூல் விமர்சனம் வானவில் வாராந்த சஞ்சிகையில் வெளி வந்தது.(24.1.1998)  
3)       இலக்கிய நுகர்ச்சியை மீள வலியுறுத்தும் சுவையான நூல் இலக்கியச்சரம் எனும் குறிப்பை கே.எஸ் .சிவகுமாரன் அவர்கள் வீரகேசரி இலக்கிய உலகு பகுதியில் எழுதியுள்ளார்.(31.07.2000)
4)       “வாசகர் மனதில் காட்சிகளை விரித்துக் கொடுக்கும் நடை”எனும் தலைப்பில் அகளங்கனின் “இலக்கியச்சரம்”நூல் வெளியீட்டு விழா சார்பாக கந்தையா ஸ்ரீ கணேசன் அவர்களின் விமர்சனம் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்தது.(31.12.2000) 

கலாநிதி அகளங்கன் அவர்களின் ஆக்கங்கள் பத்திரிகையில் வெளிவந்தவை


1)       வவுனியாவில் காடைத்தனம் எனும் இக் கட்டுரை மனிதன் பத்திரிகையில் வெளிவந்தது.(1977செப்டம்பர் )
2)       எழுந்திடுங்கள்  வன்னி காப்போம் .இக் கவிதை  சுதந்திரன் பத்திரிகையில் வெளி வந்தது. .(15.07.1979)
3)       வாலி கொலைச் சரமும் கேள்விச் சரமும் இக் கட்டுரை ஈழ நாடு பத்திரிகையில் எட்டுக் கிழமைகள் தொடராக வெளி வந்தது.(26.08.1979, 02.09.1979, 09.09.1979, 16.09.1979, 23.09.1979, 30.09.1979, 07.10.1979, 14.10.1979)
4)       மனுநீதிச் சோழன் வழி வந்த மாபெரும் பண்பாடு எனும் கட்டுரை ஈழநாடு பத்திரிகையில் இரு தொடராக வெளிவந்தது13.07.1980, 20.07.1980) .
5)       சிறுவர் நாங்கள் மானினம் வகுத்த வாழ்வு இவ்விரு கவிதைகளும் ஈழ நாடு பத்திரிகையில் வெளி வந்தன 31.08.1980. ..31.08.1980).
6)       தீக்குளிப்பு எனும் சிறுகதை ஈழ நாடு வாரமலர் பத்திரிகையில் வெளி வந்தது.(04.01.1981)
7)       ஊடலால் எரிந்தது கூடல் மாநகரம் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது( 18.04.1982)
8)       கம்பராமாயணத்தின் முதற் பாடல் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது.( 15.01.1984.).
9)       கவிஞர் கைகளில் மெருகு பெறும் சாதாரண சொற்கள் எனும் கட்டுரை ஈழ முரசு பத்திரிகையில் வெளிவந்தது (03.06.1984).
10)    சினிமாப் பாடல்களும் இலக்கியக் காட்சிகளும் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது.(18.03.1984) .
11)   தமிழ் இலக்கியப் பரப்பில் ஆடல், பாடல் அயரும் அதிசயப் பறவைகளும் மிருகங்களும் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது.(17.06.1984)
12)    “ கம்பன் செய்த வம்பு “.எனும் இவரது கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் வெளி வந்தது.(29.07.1984)
13)    புலவோர் நெஞ்சங்களில் பூத்த மலர் எனும் கட்டுரை வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது(04.11.1984) .
14)    முத்தொள்ளாயிரத்து முத்து எனும் கட்டுரை ஈழ முரசு பத்திரிகையில் வெளி வந்தது .(11.11.1984).