1989 ல் இருந்து இலக்கிய, சமயத் தொடர் சொற்பொழிவுகளை இலங்கையின் பல பாகங்களிலும் ஆற்றி வருகிறேன். மகாபாரத, பெரியபுராண,
கந்தபுராண, தொடர் சொற்பொழிவுகளையும், மற்றும் பொதுவான சமய விடயங்களையும் தலைப்புகளாகக்
கொண்ட சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகிறேன்.
அத்தோடு கந்தபுராணம்,
திருவாதவூரடிகள் புராணம், பிள்ளையார் புராணம், சிவராத்திரி புராணம் முதலான
புராணங்களைப் படனம் (புராண படனம்) செய்தல் முறையில் பொருள் விரித்துரைக்கும்
பணியையும் செய்து வருகிறேன்.
No comments:
Post a Comment